Prostrations at the lotus feet of my parents who brought me into this world and made me what I am. when every one is searching for a job, money,family,health, happiness, POWER and what not, I want to know why I have been sent by God Almighty here in this world? How I can my birth in this world be made purposeful and useful to entire Humanity. IF YOU THINK YOU HAVE THE SOLUTION SEND ME YOUR ADVICE,IF NOT JOIN ME AND WE'LL SEARCH TOGETHER. Om Namah Shivaya
Labels
- 12 JYOTIRLINGA (3)
- Aiyappan (1)
- Almighty (1)
- Amritsar (1)
- Ancient India (1)
- anger (1)
- ANNADHAANAM (2)
- APPEAL FOR HELP (2)
- appreciation (2)
- art of giving (2)
- Banana (1)
- be kind to others (2)
- belief. God (2)
- CHARITY (3)
- concious (1)
- daanam (2)
- Dashavatar (1)
- EDUCATION (1)
- enjoy (1)
- FACTS (1)
- Free Food (2)
- God (4)
- Golden Temple (1)
- gratitude (1)
- GURU (2)
- HARIHARAN (2)
- HARIKRISHNAMURTHY (2)
- Harmandir Sahib (1)
- HEALTH (1)
- Hindu Mythology (1)
- HYMNS (2)
- IN SEARCH OF SELF (8)
- insearch of self (4)
- Kaanchi (7)
- Kali yuga (1)
- Kamakshi (4)
- Kanchi (5)
- lalitha sahasranamam (1)
- Langar (3)
- listen (1)
- Lord Rama (1)
- LORD SHIVA (2)
- Lord Vishnu (1)
- maha Periyava (9)
- Mahaswami (6)
- mangala Gowri vrat (1)
- Mrs Gomathy Murthy (1)
- my automatic biography (2)
- my biography (1)
- my word (1)
- nanadana varsham (1)
- oh my God (2)
- OM NAMAH SHIVAYA (3)
- Paramacharya (5)
- Periyavaa (7)
- PRADOSHAM (1)
- PURITY HEART AND SOUL (3)
- Saastha (1)
- Safe of Kanchi (1)
- Sage of Kanchi (7)
- SAINT RAVIDAS (1)
- salvation (1)
- SCIENCE (1)
- Sikhism (1)
- Sri Rama Navami (1)
- SRI VENKATESA (1)
- Srimad Bhagavatham (1)
- STOTRAS (1)
- SUBRABATHAM (1)
- swayamvara parvati mantra (1)
- TALENT (1)
- TEMPLE (2)
- think before you act (1)
- upansayasams (1)
- Vaishnava Janato (3)
- एक बोध कथा (1)
- मूल्यवान जीवन (1)
- இன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி (1)
- திருக்கார்த்திகை தோன்றியது எவ்வாறு? (1)
- பத்மாவதி பரிணயம் (1)
- பிரதோஷம் மகிமை (1)
- ப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு - மஹா பெரியவா (1)
- வாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம். (1)
- ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள். (1)
Search This Blog
Wednesday, 6 February 2013
Ganapati Song : The best in this century!
Follow @lokakshema_hariTweet
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
power by BLOGSPOT-PING
Ganapati Song : The best in this century!
Follow @lokakshema_hariTweet
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
power by BLOGSPOT-PING
Sunday, 27 January 2013
Thirupathi Balaji Darshan - A Rare Video
Follow @lokakshema_hariTweet
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
power by BLOGSPOT-PING
Tirupati Tirumala Sri Venkateswara Swamy
Follow @lokakshema_hariTweet
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
power by BLOGSPOT-PING
Tirupati Balaji Live Darshan Abhisekam - Vaikunta Ekadasi
Follow @lokakshema_hariTweet
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
power by BLOGSPOT-PING
Follow @lokakshema_hariTweet
Wednesday, 26 December 2012
பத்மாவதி பரிணயம்
Follow @lokakshema_hari
Tweet
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
power by BLOGSPOT-PING


Wednesday, 19 December 2012
MAHA PERIYAVAA AS GODDESS ANNAPOORANI
Follow @lokakshema_hari
Tweet
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
power by BLOGSPOT-PING
|
SAGE OF KANCHI
Follow @lokakshema_hari
Tweet
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
power by BLOGSPOT-PING
திம்மகுடியில் மதுரத்தின் வீட்டு பீரோவில் இருக்கும் பவழ மாலையை எடுத்து வருமாறு, மதுரத்தின் அண்ணனுக்கு உறவினர்களுக்கு மத்தியிலும், திரளான ஊர்க்காரர்களுக்கு இடையிலும் உத்தரவு போட்டார் மகா பெரியவா.
திம்மகுடியில் மதுரத்தின் வீட்டு பீரோவில் இருக்கும் பவழ மாலையை எடுத்து வருமாறு, மதுரத்தின் அண்ணனுக்கு உறவினர்களுக்கு மத்தியிலும், திரளான ஊர்க்காரர்களுக்கு இடையிலும் உத்தரவு போட்டார் மகா பெரியவா.
‘இந்த வீட்டில் இத்தனை வருடங்கள் நான் புழங்கி வந்தும் இப்படி ஒரு பவழ மாலை இருப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லையே…’ என்று குழம்பினார் மதுரம்.
இதை அடுத்து திம்மகுடி வீட்டில் நடந்ததை மதுரமே ஆனந்தக் கண்ணீருடன் விவரிக்கிறார்.
“மகா பெரியவா குறிப்பிட்ட அறையில் இருந்து பவழ மாலையை எடுத்து வருவதற்காக என் அண்ணன் உள்ளே போனார். ஏதோ என் மன ஓட்டத்தை அறிந்து கொண்டவர் மாதிரி மகா பெரியவா புன்னகையுடன் என்னையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான், என் கணவர் உட்பட பெரும்பாலான குடும்ப உறுப்பினர் அனைவரும், ‘மகா பெரியவாளே சொல்கிறார் என்றால், அதில் ஒரு விசேஷம் இருக்கும். அந்தப் பவழ மாலை மூலமாக யாருக்கோ ஒரு நல்லது நடக்கப் போகிறது போலும்’ என்று தீர்மானித்து, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருந்தோம்.
என் அண்ணன் அரக்கப் பரக்க உள்ளிருந்து வந்தான். அவன் கையில் – வெள்ளிக் குப்பிகளால் மூடப்பட்ட பவழ மாலை இருந்தது. பெரியவா சொன்ன அடையாளத்தை வைத்து அதை எடுத்து வந்திருந்தான். பல வருடங்கள் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்ததால், பொலிவு கொஞ்சம் குறைந்திருந்தது. தன் வெண்ணிற மேல்துண்டால் அந்தப் பவழ மாலையைச் சற்றே துடைத்து விட்டு, பயபக்தியுடன் அதைப் பெரியவாளின் திருக்கரங்களில் கொடுத்தான்.
அருகில் இருந்த ஒரு பித்தளைச் சொம்பில் இருந்து கொஞ்சம் தீர்த்தத்தை அந்த மாலையின் மேல் விட்டார் மகா பெரியவா. மகானின் கை பட்டாலே புண்ணியம். அதை மேலும் புனிதம் ஆக்குகிறார் போலிருக்கு என்று நினைத்தேன். பிறகு, என்னைப் பார்த்தார்.
‘வாம்மா… இந்த வயசுலயே ஆன்மிக ஞானம் வேணும்னு ஆசைப்பட்டு, அதுக்கு என்ன மாலை போட்டுக்கலாம்னு நீதானே கொஞ்ச நாளா குழப்பத்தில் இருந்தே?’ அப்படின்னு கேட்டுட்டு, ஒரு நிமிடம் கண்களை மூடிண்டு இருந்துட்டு, சுவாமிகள் என் கையில் பவழ மாலையைப் போட்டார்.
பெரியவாளின் ஆசியைத் தாங்கிய அந்தப் பவழ மாலை என் கையில் விழுந்ததும், சிலிர்த்துப் போய் விட்டேன். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு வைக்க வேண்டும் என்று என் மனதுக்குள் மட்டும் நான் தீர்மானித்தது இந்தப் பரப்ரம்மத்துக்கு எப்படித் தெரியும்? என் கணவர் உட்பட வீட்டினர் எவருக்கும்கூட இந்த விஷயம் தெரியாதே? அங்கு கூடி இருந்த திரளான ஜனங்களும் இந்த அற்புத அருள் காட்சியைப் பார்த்து வியந்து போனார்கள்.
மகா பெரியவா ஆசிர்வதித்துக் கொடுத்த அந்தப் பவழ மாலையைக் கண்களில் ஒற்றிக் கொண்டு கழுத்தில் அணிந்து, என் கணவருடன் சேர்ந்து அவரை நமஸ்கரித்தேன். புன்னகையால் ஆசிர்வதித்தார். காஞ்சி ஸ்வாமிகளின் திருக்கரங்களில் இருந்து பவழ மாலையை வாங்கும்போது எனக்கு வயது சுமார் முப்பதுக்குள்தான் இருக்கும். இறை வழிபாட்டில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாலையை அணிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை மனதுக்குள் இருந்தாலும், அதன் மகத்துவம் அவ்வளவாக அப்போது தெரியவில்லை. இல்லறத்திலேயே இருந்து விட்டதால், இது பற்றி யோசிக்க அவகாசம் கிடைத்ததில்லை.
ஆச்சு… சுமார் நாற்பது வருஷம் ஓடியாச்சு. ஆனால், இப்போது அந்த சம்பவத்தை நினைத்தாலும் எனக்கு சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல வேண்டும். இந்தப் பவழ மாலை என் கழுத்துக்கு வந்த பிறகு, இன்றைய தினம் வரை நிம்மதியாகவும், இறை பக்தியுடனும் இருந்து வருகிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும், அதற்கும் மேலான ஓர் அமைதியை இந்தப் பவழ மாலை எனக்குக் கொடுத்தது என்பதை அவசியம் சொல்ல வேண்டும். இந்த அமைதியும், பொறுமையும், ஆன்மிக நாட்டமும் என்றென்றும் என்னிடம் இருக்க வேண்டும் என்பதை விரும்பித்தான் மகா பெரியவா அனுக்ரஹம் செய்து என்னிடம் கொடுத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.
எத்தகைய ஒரு குழப்பத்தில் இருந்தாலும், அந்த மாலையை ஒரு மந்திர சக்தியாக நினைத்துச் சில நிமிடங்களுக்குக் கையில் பிடித்திருப்பேன். என்னை சூழ்ந்து கொண்டிருக்கும் குழப்பமோ, பிரச்னையோ… சில நிமிடங்களில் பனி போல சட்டென்று விலகி விடும். சில வருடங்களுக்கு முன்புதான் அந்த மாலையைப் பிரித்து, அதில் உள்ள பவழ மணிகளை என் குடும்பத்தினருக்குப் பிரித்துக் கொடுத்து விட்டேன். என் காலத்துக்குப் பிறகும் என் குடும்ப உறுப்பினர்களுக்கு மகா பெரியவாளின் ஆசி தொடர வேண்டாமா? அவர்கள் சந்ததியும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா?
மகா பெரியவாளின் அருளால் என் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் இன்று பல இடங்களில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். எங்களது திம்மகுடி வீட்டில் காலடி எடுத்து வைத்து அவர் செய்த ஆசியினாலும், அனுக்ரஹத்தாலும்தாலும் இன்று நாங்கள் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறோம்.”
- நீண்ட பெருமூச்சுடன் சொல்லி முடித்தார் மதுரம்.
Subscribe to:
Posts (Atom)


